நடிகர் சிவாஜிகணேசன் சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை! பிரபு, ராம்குமாருக்கு எதிராக சகோதரிகள் வழக்கு

July 7, 2022 at 2:25 pm
pc

நடிகர் சிவாஜி கணேசன் சம்பாதித்த சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் நடிப்பின் இலக்கணமாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இவர் கடந்த 2001ஆம் ஆண்டு காலமானார்.

சிவாஜி கணேசனின் மனைவி பெயர் கமலா. இந்த தம்பதிக்கு ராம்குமார், பிரபு (பிரபல நடிகர்) என்ற இரண்டு மகன்களும், சாந்தி, ராஜ்வி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சம்பாதித்த சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவரது சகோதரிகள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் அனுப்பியுள்ள சட்டபூர்வ நோட்டீஸில், நிலம் அல்லது சொத்துக்களின் எந்தப் பகுதியையும் விற்பதையோ அல்லது மாற்றுவதையோ தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website