நண்பனின் மனைவியை கூட்டுப்பலாத்காரம் செய்த வாலிபர்கள்;

March 3, 2022 at 7:30 pm
pc

ஆரணியில் நண்பனின் மனைவியை கூட்டுப்பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி. இவரது மனைவி (வயது 26), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

அந்த இளம்பெண் ஆரணியில் உள்ள வாட்டர் கம்பெனியில் வேலைக்கு சென்று வரும்போது, இலுப்பகுணம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்தனர்.

டிரைவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் குடும்பத்தை பிரிந்து விட்டார். இளம்பெண் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு டிரைவருடன் சேர்ந்து வாழ்ந்தார். அவர்கள் 2 மாதங்களாக ஆரணியில் தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கணவன் மனைவியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் டிரைவரின் நண்பரான இலுப்பகுணத்தை சேர்ந்த டிரைவர் கோகுல்ராஜ் (22) பெங்களூரில் காதலித்து வந்த பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன் பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துள்ளார். இதனால் வீட்டிற்கு தெரிந்தால் பிரச்னை ஏற்படும் என்பதற்காக டிரைவரிடம் வீடு ஒன்றை வாடகைக்கு தரும்படி கேட்டுள்ளார்.

டிரைவர் தான் வசித்து வரும் வீட்டின் அருகில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளார். அங்கு கோகுல்ராஜ் காதல் மனைவியுடன் சேர்ந்து வசித்து வருகிறார்.

இந்நிலையில், டிரைவர் நேற்று முன்தினம் இரவு வேலை நிமித்தமாக செஞ்சிவரை சென்றுள்ளார். அப்போது இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார்.இதனை அறிந்த கோகுல் ராஜ், அவருடைய நண்பரான டிரைவர் ஜெயசூர்யா (22) என்பவரை போனில் தொடர்பு கொண்டு ஆரணிக்கு வரவழைத்தார். இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு, டிரைவர் வசிக்கும் வீட்டிற்கு சென்றனர். பின்னர் வீட்டில் நண்பன் இல்லையா என கேட்டுள்ளனர். அதற்கு இளம்பெண் அவர் வெளியே சென்றுள்ளார் என்று கூறியபடி தனது கணவரின் நண்பர்கள் தான் என்பதால் அவர்களை வீட்டிற்குள் அழைத்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, கோகுல் ராஜ், ஜெயசூர்யா இருவரும் திடீரென வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டனர்.

வீட்டில் இருந்த குழந்தைகளை பக்கத்து அறையில் தள்ளி சத்தம் போடாமல் இருக்க வேண்டும், இல்லை என்றால் உங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன குழந்தைகள் அமைதியாக இருந்தனர். உடனே இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை படுக்கை அறைக்கு தூக்கி சென்று கை கால்களைக் கட்டி இருவரும் கூட்டு பலாத்காரம் செய்தனர்.

மேலும் பலாத்காரம் செய்ததை செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர் கட்டுகளை அவிழ்த்து இது குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என இளம்பெண்ணை மிரட்டி விட்டு தப்பி ஓடினர்.

இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து இளம்பெண் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்கு பதிவு செய்து கோகுல்ராஜ், ஜெய்சூர்யா 2 பேரையும் கைது செய்தார்.

இது தொடர்பாக கோகுல்ராஜிடம் விசாரணை நடத்தியதில் எனது காதல் மனைவியை இளம்பெண் அடிக்கடி திட்டி வந்தார். இதனால் அவளை பழிவாங்க நண்பனின் மனைவி என்று கூடபார்க்காமல் கற்பழித்ததாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website