நண்பனை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய கொடூரம்!!அதிர வைத்த காரணம்!

July 14, 2022 at 9:20 am
pc

திண்டுக்கல் மாவட்டம் சேடபட்டியை சேர்ந்த முத்தமிழ்ச்செல்வன் மகன் அஜித்குமார்(25). பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அதேபகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் அழகுவிஜய்(23) என்பவரும் உறவினர்கள். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். அழகுவிஜய் கல்லூரி முடித்துவிட்டு கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். 

அப்போது அஜித்குமாரின் வீட்டிற்கு செல்லும்போது அவரது தங்கை துர்க்காலட்சுமி(18) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த விபரம் சமீபத்தில்தான் அஜித்குமாருக்கு தெரியவந்தது. 

இதனால் அவர் தனது தங்கையையும், அழகுவிஜயையும் கண்டித்துள்ளார். இருந்தபோதும் அவர்கள் யாருக்கும் தெரியாமல் பேசி பழகி வந்துள்ளனர். இதனால் தனது தங்கையை காதலிப்பதை மறந்துவிட்டதாக நினைத்து அஜித்குமார் எப்போதும்போல் நட்பாக பழகி வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகுவிஜயின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி நண்பர்களை வரவழைத்து கேக் வெட்டி மகிழ்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அஜித்குமாரின் தாய் ராமேஸ்வரத்திற்கு சென்றுவிட்டதாக தகவல் கிடைத்தது.

வீட்டில் துர்க்காலட்சுமி மட்டும் தனியாக இருப்பதை அறிந்ததும் அவரை பார்க்க அழகுவிஜய் சென்றுள்ளார். அப்போது திடீரென அஜித்குமார் வந்துவிடவே ஆத்திரமடைந்தார். தனது தங்கையையும், அழகுவிஜயையும் கடுமையாக தாக்கினார். அழகுவிஜய் மயக்கமடைந்து கீழே விழவே கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் சாக்குமூடையில் கட்டி ஆத்தூர் அணைப்பகுதிக்கு கொண்டு சென்றார்.

அப்போது அங்கு வந்த அவரது தந்தை முத்தமிழ்ச்செல்வன் உடலை யாரும் பார்க்காத வகையில் சடையாண்டி கோவில் அருகே வீசிவிட்டு சென்றுவிட்டனர். அழகுவிஜய் கொலை செய்யப்பட்டது தெரியவரவே அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர்பொதுமக்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தந்தையை கைது செய்த போலீசார் தலைமறைவான அஜித்குமாரை தேடி வந்தனர். அவரையும் கைது செய்யாவிட்டால் இன்று சாலை மறியலில் ஈடுபடபோவதாக அழகுவிஜய் உறவினர்கள் தெரிவித்தனர். இதனிடையே செம்பட்டி இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை போலீசார் அஜித்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். 

பெங்களூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். தற்போது செம்பட்டி போலீஸ் நிலையத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தங்கையை காதலித்தற்காக உயிருக்கு உயிராக பழகிய நண்பரையே தீர்த்துக்கட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website