நண்பர்களுடன் வைகை ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன்; சுழலில் சிக்கி உயிரிழந்த சோகம்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள டி. அதிகரை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மகன் தீனதயாளன். இவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் திருப்புவனம் அருகே உள்ள தட்டான்குளம் கிராமத்தின் அருகே செல்லும் வைகை ஆற்றில் தனது நண்பர்கள் ஒன்பது பேருடன் குளிக்க சென்றுள்ளார்.
தற்போது வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு தண்ணீர் கரையின் இருபுறமும் ஆர்ப்பரித்து சென்று கொண்டிருக்கிறது. அந்த ஒன்பது பேர்களில் தீனதயாளன், இவரின் நண்பர்கள் இரண்டு பேர் உட்ப 3 பேரூர் மட்டும் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர்.
இதில் 3 பேர் சுழலில் சிக்கி மூவரையும் இழுத்து சென்றுள்ளது. சக மாணவர்கள் சத்தம் போடவே அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த நபர்கள் தீனதாயளுடன் சென்ற இருவரை காப்பாற்றி உள்ளார்கள். தீனதயாளனை காப்பாற்ற முடியாதால் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீனதயாளின் உடலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் மாயமானது அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது