நமக்கில்லை என லொட்டரியை குப்பையில் வீசிய நபர்..பின்னர் கோடீஸ்வரனாக மாறிய அதிசயம்

October 22, 2023 at 1:27 pm
pc

இந்திய மாநிலம் கேரளாவில் ஆட்டோ சாரதி ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்தது.

ஆட்டோ சாரதி 

கேரளாவின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது சுனில் குமார். இவர் ஆட்டோ சாரதியாக வேலை பார்த்து வருகிறார். 

இந்த நிலையில் லொட்டரி டிக்கெட் ஒன்றை சுனில் குமார் வாங்கியுள்ளார். ஆனால், தமக்கு அதில் பரிசு விழ வாய்ப்பில்லை என அவர் நினைத்துள்ளார்.

இதனால் அவர் அந்த லொட்டரி டிக்கெட்டை குப்பையில் வீசியதாக தெரிகிறது.

ஒரே நாளில் கோடீஸ்வரன்

இதனைத் தொடர்ந்து பரிசு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதையறிந்த சுனில் குமார் விரைந்து சென்று குப்பையில் வீசிய லொட்டரி டிக்கெட்டை தேடிக் கண்டுபிடித்துள்ளார்.

அதனை சரிபார்த்தபோது தனக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.

இதன் காரணமாக ஒரே நாளில் ஆட்டோ சாரதியாக இருந்து சுனில் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.      

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website