நம் தோட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் நாய் கடுகு கீரை நன்மையை பற்றி தெரியுமா …?

December 3, 2022 at 7:38 am
pc

நம் தோட்டத்தில் தானாகவே வளரும் செடியானது நாய்க்கடுகு. இந்த செடியானது இயற்கையாகவே வயல்வெளியில் காணப்படும். செடியின் பூக்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

அந்த செடியில் உள்ள காயானது கடுகு போன்று இருக்கும். இந்தச் செடியின் இலைகளை பறித்து கீரை போல் சமைத்து சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள நாடா புழுக்கள், கொக்கி புழுக்கள் போன்றவைகள் நீங்கும். உடல் வலி கல்லீரல், மண்ணீரல் பிரச்சனைகள் தீரும்.அதுமட்டுமல்லாமல் தலையில் நீர் கோர்த்து இருந்தால் அவையும் சரியாகிவிடும்.

அதன் பிறகு நம் உடலில் தீராத காயங்கள் ஏற்பட்டால் இதனை சாப்பிட்டு வர உடனடியாக காயங்கள் ஆறும். உடலில் ஏற்பட்டுள்ள கட்டிகளை உடைப்பதற்கு இந்த கீரை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தக் கீரையை சாப்பிட்டு வர ஞாபகசத்தை அதிகரிக்கும். நல்ல தூக்கம் ஏற்படும் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதன் பிறகு காது வலி ஏற்பட்டால் இந்த தலையை அரைத்து அதனுடைய சாற்றை காதில் ஊற்றினால் காது வலி குணமாகும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website