நயன்தாரா-விக்கி திருமணத்திற்கு 3 பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பா?
நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. அவர்களின் திருமணம் திருப்பதியில் நடக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் கசிந்திருக்கும் அழைப்பிதழில் மகாபலிபுரம் என்று போட்டிருக்கிறது. எது எப்படியோ, திருமணம் நடந்தால் போதும் என்கிறார்கள் ரசிகர்கள்.
அழைப்பு
திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்த அனைவரையும் அழைக்கவில்லையாம். மூன்றே மூன்று பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறதாம். இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் முன்னிலையில் மட்டுமே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்களாம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும்.
வரவேற்பு
திருமணத்தை அடுத்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தப் போகிறார்களாம். அந்த நிகழ்ச்சிக்கு திரையுலக பிரபலங்களை அழைக்க முடிவு செய்திருக்கிறார்களாம். திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த கையோடு அவரவர் பட வேலையில் ஈடுபடப் போகிறார்களாம். தேனிலவுக்கு செல்ல தற்போது நேரம் இல்லையாம்.
விஜய் சேதுபதி
தனக்கு பிடித்த ஹீரோவான விஜய் சேதுபதி, தன் நெருங்கிய நண்பரான இயக்குநர் நெல்சன் திலீப்குமார், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தபோது பழக்கமான சமந்தா ஆகிய மூன்று பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருக்கிறாராம் விக்னேஷ் சிவன். நண்பர் அனிருத்தை ஏன் அழைக்கவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.