நாக்குக்கு சுவையான நவரத்ன புலாவ் செய்வது எப்படி…?

December 26, 2022 at 7:26 am
pc
தேவையானபொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 கப்
பன்னீர் – 200 கிராம்
உப்பு
நெய்
முந்திரி பருப்பு
பாதாம் நறுக்கியது
காய்ந்த திராட்சை
உருளைக்கிழங்கு நறுக்கியது
கேரட் நறுக்கியது
காலிஃபிளவர் நறுக்கியது
பீன்ஸ் நறுக்கியது
பச்சை பட்டாணி
பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை
அன்னாசி பூ, கிராம்பு
மிளகு – 1 தேக்கரண்டி
ஷாஜீரா – 1 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழம்
குங்குமப்பூ பால்
வறுத்த வெங்காயம்


செய்முறை:
  1. முதலில் அரிசியை கழுவி 30 நிமிடம் ஊறவிடவும். பின்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் சூடானதும், அதில் ஊறவைத்த அரிசி மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.
  2. பின்பு அரிசி வெந்ததும் தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
  3. கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பு, பாதாம், காய்ந்த திராட்சை சேர்த்து வறுத்து எடுக்கவும்.
  4. அடுத்து கடாயில் நெய் ஊற்றி அதில் நறுக்கிய பன்னீரை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  5. அடுத்து கடாயில் உருளைக்கிழங்கு, கேரட் சேர்த்து வதக்கவும். காய் பாதி வதங்கியதும் உப்பு சேர்த்து கிளறவும். கடாயை மூடிவைத்து 5 நிமிடம் வேகவிடவும்.
  6. அடுத்து கடாயில் நெய் ஊற்றி அதில் நறுக்கிய காலிஃபிளவர், பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும். பின்பு கடாயை மூடி 5 நிமிடம் வேகவிடவும்.
  7. பின்பு உப்பு சேர்த்து கலந்து கடாயை மூடி 5 நிமிடம் வேகவிடவும்.
  8. அடுத்து அகலமான கடாயில் நெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ, மிளகு, ஷாஜீரா சேர்த்து கலந்து கொள்ளவும்.
  9. பின்பு வேகவைத்த பாஸ்மதி அரிசியை சேர்க்கவும்.
  10. பிறகு வறுத்த காய்கறிகள் மற்றும் பன்னீரை சேர்க்கவும்.
  11. பின்பு உப்பு, எலுமிச்சைபழச்சாறு, குங்குமப்பூ பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  12. பிறகு வறுத்த முந்திரி, பாதாம், திராட்சையை சேர்த்து கிளறவும்.
  13. கடைசியாக வறுத்த வெங்காயம் சேர்த்து கடாயை மூடி குறைந்த தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.
  14. நவரத்ன புலாவ் தயார்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website