நாக்குக்கு சுவையான நவரத்ன புலாவ் செய்வது எப்படி…?
தேவையானபொருட்கள்
பாஸ்மதி அரிசி – 1 கப்
பன்னீர் – 200 கிராம்
உப்பு
நெய்
முந்திரி பருப்பு
பாதாம் நறுக்கியது
காய்ந்த திராட்சை
உருளைக்கிழங்கு நறுக்கியது
கேரட் நறுக்கியது
காலிஃபிளவர் நறுக்கியது
பீன்ஸ் நறுக்கியது
பச்சை பட்டாணி
பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை
அன்னாசி பூ, கிராம்பு
மிளகு – 1 தேக்கரண்டி
ஷாஜீரா – 1 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழம்
குங்குமப்பூ பால்
வறுத்த வெங்காயம்
செய்முறை:
- முதலில் அரிசியை கழுவி 30 நிமிடம் ஊறவிடவும். பின்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் சூடானதும், அதில் ஊறவைத்த அரிசி மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.
- பின்பு அரிசி வெந்ததும் தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
- கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பு, பாதாம், காய்ந்த திராட்சை சேர்த்து வறுத்து எடுக்கவும்.
- அடுத்து கடாயில் நெய் ஊற்றி அதில் நறுக்கிய பன்னீரை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- அடுத்து கடாயில் உருளைக்கிழங்கு, கேரட் சேர்த்து வதக்கவும். காய் பாதி வதங்கியதும் உப்பு சேர்த்து கிளறவும். கடாயை மூடிவைத்து 5 நிமிடம் வேகவிடவும்.
- அடுத்து கடாயில் நெய் ஊற்றி அதில் நறுக்கிய காலிஃபிளவர், பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும். பின்பு கடாயை மூடி 5 நிமிடம் வேகவிடவும்.
- பின்பு உப்பு சேர்த்து கலந்து கடாயை மூடி 5 நிமிடம் வேகவிடவும்.
- அடுத்து அகலமான கடாயில் நெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ, மிளகு, ஷாஜீரா சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பின்பு வேகவைத்த பாஸ்மதி அரிசியை சேர்க்கவும்.
- பிறகு வறுத்த காய்கறிகள் மற்றும் பன்னீரை சேர்க்கவும்.
- பின்பு உப்பு, எலுமிச்சைபழச்சாறு, குங்குமப்பூ பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பிறகு வறுத்த முந்திரி, பாதாம், திராட்சையை சேர்த்து கிளறவும்.
- கடைசியாக வறுத்த வெங்காயம் சேர்த்து கடாயை மூடி குறைந்த தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.
- நவரத்ன புலாவ் தயார்.