நாடு முழுவதும் ரிலையன்ஸ் ஜியோ சர்வர்கள் தற்காலிக முடக்கம்…
நாடு முழுவதும் ரிலையன்ஸ் ஜியோ சர்வர்கள் தற்காலிகமாக செயலிழந்தன. ஜியோ பிராட்பேண்ட் மற்றும் இணைய சேவைகள் கிடைக்காததால், புதன்கிழமை காலை முதல் பயனர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். காலை 10 மணி முதல் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ட்விட்டர் தளத்தில் பயனர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
டெல்லி, கொல்கத்தா, மும்பை, சண்டிகர், ஹைதராபாத், பெங்களூர் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதற்கு பதிலளித்த ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகம், இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பதாகத் தெரிவித்துள்ளது.