நானியுடன் கைகோர்க்கும் சிபிச்சக்ரவத்தி ..
சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. முதல் படமான ’டான்’ திரைப்படம் 100 கோடி வசூல் செய்ததை அடுத்து அவர் ரஜினிகாந்த், விஜய் உட்பட சில பிரபலங்களின் படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால் தற்போது அவரது அடுத்த படத்தில் தெலுங்கு நடிகர் நானி நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதும் பணியை ’பாகுபலி’ படத்தின் திரைக்கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.