நாய்களுக்கும் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் – பீதியில் மக்கள்

March 6, 2020 at 12:17 am
pc

னாவின் ஹாங்காங் நகரில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவருகிறது. இந்த நிலையில் நாய் ஒன்றுக்கு இந்த
வைரஸ் அறிகுறி உள்ளது என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் பல ஆயிரம் மக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர். சீனாவில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படித்துள்ளார். 3000 பேர் இறந்தும், 6000 தீவிர சிகிச்சையிலும் உள்ளனர். மேலும் இந்தியா போன்ற பல்வேறு உலக நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த ஒரு சூழலில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசும் பல்வேறு நடவடிகைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு நாய்க்கு கூட இந்த கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளது. என ஹாங்காங் விவசாயம் மற்றும் மீன்வள துறை அறிவித்துள்ளனர். அந்த நாயின் உரிமையாளருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும் அதன் காரணமாக பரவி இருக்கலாம் என கூறியுள்ளனர்.
60 வயது பெண்மையின் ஒருவருக்கு குறைந்த அளவில் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அவரது செல்லப்பிராணிக்கும் பொமரேனியனின் நாய்க்கும் மருத்துவர்கள் சோதனை செய்து உள்ளனர்.

இதன் பிறகு இந்த நாயை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டுஉள்ளார்களாம்.இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் இதுவரை எந்த செல்லப்பிராணிக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website