நாய்க்கு சோறு போடாததால்..தம்பியை கொடூரமாக தாக்கிய அண்ணன்!!விலா எலும்புகள் உடைந்து ,பரிதாபமாக உயிரிழந்த தம்பி..

November 7, 2022 at 3:22 pm
pc

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் ஹக்கீம் மற்றும் ஹர்ஷாத். கேபிள் ஆப்பிரேட்டர்களான இவர்கள் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகின்றனர். ஹக்கீம் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். நாய்க்கு சாப்பாடு கொடுக்கவில்லை என ஹர்ஷாதை மிக கொடூரமாக ஹக்கீம் தாக்கியுள்ளார். இதில் ஹர்ஷாத்திற்கு 160 காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவரது விலா எலும்புகள் முறிவடைந்துள்ளன. நாய்க்கு அணிவிக்கப்படும் பெல்ட்டாலும், மரக்கம்பாலும் இவர் தாக்கப்பட்டுள்ளார். 
அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் மாடியிலிருந்து விழுந்ததால் அடிப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் போதே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website