நியாய விலை கடைகளில் நவீன தானிய ஏடிஎம்-கள் அறிமுகம்!

March 20, 2023 at 7:18 am
pc

நியாய விலை கடைகளில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருப்பதைத் தவிர்க்கவும், சரியான அளவில் உணவு தானியங்கள் வழங்கவும் தானியங்கி இயந்திரம் மூலம் உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் ரேசன் கடைகளில் நவீன தானிய ஏடிஎம்-கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகைகளை பதிவு செய்தால் தானியங்களை பெறும் வகையில் தானிய ஏடிஎம்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே வாரணாசி, நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே இவ்வகை ஏடிஎம்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் ஏழு கிலோ தானியத்தை இயந்திரங்கள் வழங்கும் என்றும் ரேஷன் கடைகளில் எடை அளவு ஆகியவற்றில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க இந்த இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website