நிர்வாணமாக புகைப்படம் எடுத்து முதியவரிடம் ரூ.11 லட்சம் மோசடி!

July 27, 2023 at 8:53 pm
pc

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பட்டா பகுதியை சேர்ந்தவர் 75 வயது முதியவர். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். கேரள பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வில் உள்ளார். இவர் வாடகைக்கு வீடு தேடிக்கொண்டு இருந்தார். அப்போது பத்தனம்திட்டா மலையாளப்புழா பகுதியைச் சேர்ந்த சீரியல் நடிகை நித்யா சசி (32),உடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. முதியவர் வாடகை வீடு தொடர்பாக நித்யாவை சந்தித்தார்.

அப்போது முதியவரை வாடகை வீட்டிற்கு அழைத்து சென்று காட்டுவதாக கூறி ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளார். அங்கு அவரது உறவினர் பரவூர் கலைக்கோடு பகுதியைச் சேர்ந்த பினுவும் (48) வந்து உள்ளார். இருவரும் சேர்ந்து முதியவரை ஆடையை கழற்றுமாறு மிரட்டி நிர்வாணமாக இருந்த நித்யாவுடன் ஆபாசமாக புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர் இருவரும் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி ரூ.25 லட்சம் பணம் கேட்டுள்ளனர். 

ஆனால் முதியவர் ரூ.11 லட்சம் கொடுத்து உள்ளார். இருப்பினும், நித்யாவும்,பினுவும் மீண்டும் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதை தொடர்ந்து முதியவர் கடந்த 18ம் தேதி பரவூர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.போலீசார் ஆலோசனைப்படி மீதிப் பணத்தைத் தருவதாகக் கூறி நித்யாவையும், பினுவையும் வீட்டிற்கு முதியவர் அழைத்து உள்ளார். அங்கு வந்த நித்யாவையும், பினுவையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website