நீட் தேர்வு தோல்வி: மாணவி தற்கொலை!!கதறும் குடும்பம்
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி நடந்தது. இந்த நிலையில் தேர்வு முடிவு நேற்று இரவு 11 மணிக்கு மேல் வெளியானது.
இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும், கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதத்தைவிட சற்று குறைந்திருக்கிறது.
இந்நிலையில், திருவள்ளூர், அம்பத்தூர், சோழபுரம் பகுதியை சேர்ந்த லக்சனா ஸ்வேதா ( 19) என்ற மாணவி நீட் தேர்வு எழுதியுள்ளார். தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.