நீரிழிவு நோயாளிகளின் நகங்கள் ஏன் கருப்பாக மாறுகிறது தெரியுமா?

July 21, 2023 at 3:53 pm
pc

பொதுவாகவே இப்போது சக்கரை வியாதி என்ற ஒன்று அனைவருக்கும் பழக்கமாகிவிட்டது. அதுவும் இப்போது வயது வித்தியாசம் பார்க்காமல் தாக்குகிறது. சக்கரை அளவானது 120முதல் 140மி.கி./டெ.லி. வரை இருந்தால் சரியான அளவு இதிலிருந்து அதிகமானால் சக்கரை வியாதியை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

சக்கரை நோயானது இனிப்பு உணவுகள், கொழுப்பு உணவுகள் உண்பவர்களுக்கு தான் இந்த சக்கரை நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.

மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் உங்களுக்கும் அந்த நோய் வந்து விடும்.இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கிறது. அவை உணவுகளில் மட்டுமல்ல உங்கள் ஆரோக்கியத்திலும் அதிகம் கவனம் செலுத்துகிறது.

அதிலும் சக்கரை நோயாளிகளுக்கு கை, கால்களில் இருக்கும் நகங்கள் கருப்பாக மாறுகிறது. இது எதனால் தெரியுமா?

இந்த சக்கரை வியாதியானது உடம்பில் இருக்கும் அனைத்து பாகங்களையும் பாதிக்கும். அதிலும் குறிப்பாக ஒரு சிலருக்கு கால் நகங்கள் கருப்பாக மாறும் இது எதனால் தெரியுமா?

காலில் சப்பாத்து அணிபவர்களுக்குத் தான் இது அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இது டெர்மெட்டோபைட் எனும் பூஞ்சையால் ஏற்படுகிறது.

நகங்களில் ஏற்படும் காயங்களால் ரத்த நாளங்கள் வெடித்து இரத்தம் அதிகமாக வெளியேறி நகத்தின் நிறத்தை மாற்றும்.

சில நேரங்களில் தோலில் ஏற்படும் மெலனோமா எனும் புற்றுநோய் காரணமாக நகத்தின் நிறம் மாறும்.

சிறுநீரக பாதிப்பு, ரத்த சோகை அல்லது இதய நோய் போன்ற பிரச்சினைகள் காரணமாகவும் நகத்தின் நிறம் கருப்பாக மாறுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website