நீர்க்கட்டு நீங்க மருந்தில்லா மருத்துவம் …!!
நீர்கட்டால் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குணமாக்க சித்தர்கள் அருளிய பச்சிலை வைத்தியம்
தேவையான பொருட்கள்
அழிஞ்சில் இலை
புளிய மரத்து இலை
ஊனாங்கொடியின் இலை
செய்முறை
இவைகளை வகைக்கு இரண்டு கைப்பிடி அளவு எடுத்து கொண்டு
இரண்டு கைப்பிடி இலைக்கு கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி இலைகளை தனித்தனியாக வேக வைத்து இலைகள் சூடு ஆறியபின்நீர்க்கட்டு உள்ள மூட்டுகளின் மீது முதலில் புளிய இலையை முழங்காலின் முன்னும் பின்னுமாக வைத்துஅதன்பின் புளிய இலைக்கு மேலே அழிஞ்சில் இலையை கால் மூட்டுகளின் மீது வைத்து அடுத்ததாக ஊனாங்கொடியின் இலைகளை அழிஞ்சில் இலையின் மேலே பரப்பி மூட்டுகளில் முன்னும் பின்னும் கவசம் செய்வதைப்போல மூடி இதற்கு மேலே ஒரு துணியால் கட்டி வைத்து
இதை இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் இந்த கட்டை அவிழ்த்துவிட்டு வெந்நீர் வைத்து ஒத்தடம் கொடுத்துவர எப்பேர்பட்ட தீராத மூட்டுவலி மூட்டு வீக்கம் நீர்க்கட்டு முழுமையாக குணமாகும்