நெகிழ்ச்சி.. தன்பால் ஈர்ப்பாளர் திருமணம்!
உலகம் முழுவதும் தன்பால் ஈர்ப்பாளர்களை புறக்கணித்து வருவது தொடர் கதையாக உள்ளது. இதனால், அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் தன்பால் ஈர்ப்பாளர்களான மணிஷா, எலிசா வாகித் ஜோடிக்கு பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயமான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மணிஷா, எலிசா வாகித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் தன்பால் ஈர்ப்பு திருமணங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இத்திருமணம் அதிக பேசுபொருளாகியுள்ளது.