நோ ஷேவிங்.. நோ வேக்சிங்.. அக்குள் முடிகளை அகற்ற சூப்பர் டிப்ஸ் …!!
கோடைக்காலத்தில் அக்குள் பகுதியை முடியின்று சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில், வெயிலால் வியர்வை அதிகரித்து அக்குள் பகுதிகளில் கிருமிகளை எளிதில் தங்கிவிடும். அப்போது நீங்கள் முடியை சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால் துர்நாற்றம் வீசக்கூடும். அக்குளில் வளரும் முடியை நீக்க ஏராளமான வழிகள் இருக்கின்றன. அக்குளில் உள்ள முடியை நீக்க ஷேவிங் மற்றும் அழகு நிலையங்களுக்கு சென்றால் தான் நீக்க முடியும் என்பதில்லை. முடியை நீக்க பல இயற்கை வழிகளும் உண்டு. குறிப்பாக, இயற்கை வழிகளில் அக்குள் முடியை நீக்கினால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. இதை நீங்கள் வீட்டிலேயே செய்ய முடியும்.
அக்குள் முடியை நீக்க
டிப்ஸ் – 1
- ஒரு பவுளில் சிறிதளவு மஞ்சள், பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
- பின் அதை அக்குளில் தடவி 20 – 30 நிமிடங்களுக்கு அப்படியே ஊற வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு துணியை நனைத்து அக்குளைத் துடைத்து எடுக்க வேண்டும்.
- இதை அடிக்கடி செய்து வர, அக்குளில் உள்ள நாளடைவில் தளர்ந்து உதிர்ந்துவிடும்.
டிப்ஸ் – 2
- ஒரு பவுளில் 1 டீஸ்பூன் பிரஷ் க்ரீம், 4 – 5 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் அனைத்து சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளுங்கள்.
- அந்த கலவையை அக்குளில் முடி வளரும் திசையை நோக்கி தடவி, ஒரு 30 நிமிடம் அப்படியே வைத்து, நீரால் மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.
- இதை வாரத்திற்கு ஒருமுறைய செய்து வருவதன் மூலம் அக்குளில் உள்ள முடி நீங்கும்.
டிப்ஸ் – 3
- ஒரு பவுளில் 2 ஸ்பூன் பால், 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அந்த பேஸ்ட்டை அக்குளில் தடவி வேண்டும்.
- பின்னர் அது உலர்ந்து உடன் குளிர்ந்த நீர் கொண்டு கழுவுங்கள்.
- இப்படி செய்தாலும் அக்குளில் உள்ள முடி விரைவில் உதிர்ந்து விடும்.
அக்குள் கருமை நீங்க
- ஒரு பவுளில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
- அதை அக்குளில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் பண்ணுங்க.
- 15 நிமிடம் கழித்து, தண்ணீரில் அக்குளை கழுவிக் கொள்ள வேண்டும்.
- இதை வாரத்தில் மூன்று முறை செய்து வர, அக்குள் கருமை நீங்கி வெள்ளையாகி விடும்.
வியர்வை நாற்றம் நீங்க
- இரவு தூங்குவதற்கு முன் சிறிதளவு வினிகரை பஞ்சில் நனைத்து அக்குள் பகுதியில் தடவிக் கொள்ள வேண்டும்.
- பின் காலை சோப் போட்டு அக்குளை நன்றாக கழுவி விட வேண்டும்.
- இவ்வாறு செய்தால் வியர்வை நாற்றம் இருக்காது.