பக்ரீத் பண்டிகை ஸ்பெஷல்..இந்த செம்மறி ஆடு விலை 1 கோடி ருபாய்!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் செம்மறியாடு ஒன்று 1 கோடி ரூபாய்க்கு விலை போக பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்டின் உடலில் கவனித்தபோது 786 என்ற எண்கள் காணப்பட்டன, இந்த 786 என்ற எண்கள் இஸ்லாம் மதத்தில் புனிதம் வாய்ந்தவை என கருதப்படுகிறது. இந்த செம்மறியாட்டுக்கு ரூ.1 கோடி வரை விலை கொடுத்து வாங்க பலரும் முன்வந்த நிலையில் ஆட்டின் உரிமையாளர் ராஜூ சிங் விற்க மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் அந்த ஆட்டை வீட்டுக்குள் வைத்து பாதுகாத்து வருகிறார்.