படுக்கையில் சிறுநீர் கழித்த சிறுமி- பிறப்புறுப்பில் சூடு வைத்து சித்திரவதை செய்த வளர்ப்பு தாய்!!
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்துவரும் பெண் ஒருவர் பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். 9 வயதான அந்த சிறுமி இரவில் உறங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது வளர்ப்பு தாய், அந்த சிறுமியை அடித்து உதைத்ததோடு பிறப்புறுப்பில் சூடும் வைத்து சித்திரவதை செய்துள்ளார். இதனால், அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பக்கத்து வீட்டுகாரர்களுக்கு தெரியவந்தையடுத்து, உடனடியாக அவர்கள் அந்த சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இது குறித்து காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் போலிஸார் சிறுமியின் வளர்ப்பு தாய் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாநில குழந்தைகள் நலக் கமிட்டி தலைவர் கூறுகையில் அந்த சிறுமியின் தலை முடி புடுக்கப்பட்டுள்ளது என்றும், உடல் முழுக்க நக கீரல் தடங்கல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த சிறுமி விரைவில் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுவார் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.