பட்டப்பகலில் பக்கத்து வீட்டுக்காரருடன் மனைவி உல்லாசம்.. நேரில் பார்த்த கணவன் வெறிச்செயல்!

May 5, 2022 at 2:40 pm
pc

உத்தரபிரதேச மாநிலம் ராஜன்பூர் மாவட்டம் ரசூல்பூர் பகுதியை சேர்ந்தவருக்கு 28 வயதில் மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. இதற்கிடையில், அந்த கணவரின் மனைவிக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது.

இந்நிலையில், சம்பவ தினமான நேற்று அந்த பெண் தனது கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரருடன் தகாத உறவில் இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த அந்த பெண்ணின் கணவன் தனது மனைவி பக்கத்து வீட்டுக்காரருடன் தகாத உறவில் இருந்ததை நேரில் பார்த்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர் வீட்டில் இருந்த கத்தியை கொண்டு தனது மனைவியை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். கணவர் நடத்திய இந்த கத்திக்குத்து தாக்குதலில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட போலீசார் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவனை கைது செய்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website