“பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சி காட்டவில்லை” -இல்ல பணத்துக்காகவா ?நடிகை கிரண் வெளிப்படை!

July 24, 2022 at 8:53 am
pc

ஜெமினி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை கிரண். அதன் பின்பு ஒரு சில படங்களில் நடித்த இவர் பட வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சிக்கு தாவி விட்டார். அதன்பின் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனமாடி வந்தார்.

அதன் பின்பு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த கிரண் பல வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள படத்தில் நடித்திருந்தார். ஆனால் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கிரண் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இதற்காக ஒரு செயலியை உருவாக்கி அதில் கிரணுடன் போன் கால், வீடியோ கால் பேச கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாறு கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரை கவர தான் கிரண் இவ்வாறு செய்கிறார் என குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.

இதற்கு கிரண் தைரியமாக பதில் அளித்துள்ளார். அதாவது பட வாய்ப்புக்காக நான் இவ்வாறு போட்டோக்களை போடவில்லை. எனக்கு சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வம் அதிகம். இதனால் பொழுதுபோக்கிற்காகவும், என்னை பிஸியாக வைத்துக் கொள்வதற்காகத்தான் இவ்வாறு போட்டோக்களை பகிர்ந்து வருகிறேன்.

மேலும் அதற்காக சில போட்டோக்களுக்கு கட்டணங்களும் சொல்லி இருக்கிறேன். இதை எனக்கு மிகவும் மன நிறைவுடன் இருக்கிறது. அதனால்தான் இவ்வாறு செயல்பட்டு வருகிறேன் அதை தவறாக சிலர் புரிந்து கொண்டு பட வாய்ப்புக்காக இவ்வாறு செய்கிறேன் என கூறுகிறார்கள் என்று பதிலளித்துள்ளார்.

ஏற்கனவே போட்டோக்களுக்கு கட்டணம் வசூலித்து வருவதை விமர்சித்து வந்த ரசிகர்கள் தற்போது இவ்வாறு சொல்லி இருப்பதை அறிந்த கவர்ச்சி காட்டுவதற்கு இப்படி ஒரு விளக்கமாக கிரண் என கலாய்த்து வருகின்றனர். ஆனாலும் அவருடன் வீடியோ காலில் பேச ரசிகர்கள் பணத்தை வாரி கொட்டவும் தான் செய்கின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website