பப்ஜி விளையாட்டின் போது தகராறு; நண்பனை கத்தியால் குத்திய கொடுமை…
பப்ஜி விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில், நண்பனை கத்தியால் குத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையை அடுத்த கூடப்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் தனது நண்பர் சசிகுமாருடன் சேர்ந்து பப்ஜி விளையாடி வந்துள்ளனர். விளையாட்டிற்கு இடையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அஜித் குமார் தனது சகோதரர்களை வரவைத்து சசிகுமாரை கத்தியால் குத்தியுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த சசிகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் செல்வம், சாமுவேல், அபிலேஷ் மற்றும் விஜயகுமார் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.