பலாத்காரம், கருக்கலைப்பு…. பாலியல் வழக்கில் சிக்கிய அமைச்சரின் மகன்..!
23 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ராஜஸ்தான் அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோகித்தை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், அம்மாநில அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோஹித் மீது டெல்லியைச் சேர்ந்த 23 வயது பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை டெல்லி சர்தார் பஜார் காவல்துறை விசாரித்து வருகிறது. புகாரில் கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி முதல் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி வரை ரோகித் ஜோஷி பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் தனது குற்றச்சாட்டில் கூறியிருக்கிறார். நெருக்கமாக இருந்தபோது எடுத்த அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டியதாகவும் பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் கூறி இருக்கிறார்.
இளம்பெண் கொடுத்த இந்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்த காவல்துறை, அமைச்சரின் மகனை கைது செய்ய இன்று ராஜஸ்தான் விரைந்துள்ளது. 15 பேர் கொண்ட குழு ஜெய்பூரில் உள்ள அமைச்சரின் வீட்டில் சோதனை நடத்திய நிலையில், அங்கிருந்து அமைச்சரின் மகன் தப்பி தலைமறைவானார். இதையடுத்து ரோகித்தை டெல்லி போலீசார் கைது செய்தனர்.