பலாப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகள் ஏற்படுமா?
பலாப்பழம் என்பது அனைவருக்குமே பிடித்தமான ஒரு பழமாகக் காணப்படுகிறது. இது தேன் போன்ற இனிமையான சுவையைக் கொண்டது. அதனாலேயே இதை அனைவரும் வாங்கி உண்ண ஆர்வமாக இருப்பார்கள். அதிலும் வெயில் காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. பலாப்பழம் சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் இருக்கின்றதென்பது உண்மைதான்.
காரணம் இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. ஆனால், பலாப்பழம் உண்பதால் தீமைகளும் காணப்படுகின்றது.
சரி இனி அவற்றைக் குறித்து பார்ப்போம்.
இரத்தம் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் பலாப்பழம் உண்பதை தவிர்க்க வேண்டும்.
எடையைக் குறைக்க விரும்புவர்கள் பலாப்பழம் சாப்பிடக்கூடாது.
ஏனென்றால், பலாப்பழத்தில் அதிக கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுக்கள் உள்ளன. எனவே இது உடல் எடையை அதிகரிக்க வழிசமைக்கும்.
பலாப்பழத்தை அறுவை சிகிச்சையின்போதோ அல்லது அதற்கு பின்பு பயன்படுத்தும் மருந்துகளுடனோ உட்கொண்டால் மயக்கம் ஏற்படும்.
பலாப்பழம் சாப்பிட்டால் ஒரு சிலருக்கு அரிப்பு, சுவாசிப்பதில் சிரமம், வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
பலாப்பழத்தை அதிகமாக சாப்பிடும்பொழது, வாந்தி, வயிற்று வலி, வயிறு மந்தமாதல் போன்ற ஏற்படும்.