பல் துலக்காமல் முத்தம் கொடுத்ததால் தகராறு; மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்!

பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவன் குத்தி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ் இவரது மனைவி தீபிகா. இவர்களுக்கு ஒன்றைரை வயதில் குழந்தை உள்ளது. காலை எழுந்ததும் அவினாஷ் தன் குழந்தைக்கு முத்தம் கொடுத்து கொஞ்சி உள்ளார். இதை பார்த்த தீபிகா பல் துலக்காமல் குழந்தைக்கு ஏன் முத்தம் கொடுத்தீர்கள் என கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த அவினாஷ் மனைவியை கத்தியால் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த தீபிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவினாசை கைது செய்தனர்