பள்ளியில் நம்பர்-1 இப்போது சினிமா நடிப்பில் நம்பர்-1.., கலக்கும் சமந்தா !!

June 7, 2020 at 3:21 pm
pc

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்தியத் திரையுலகில் அனைத்து மொழிகளிலும் நடிகை சமந்தா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சென்னையில் பிறந்த இவர் மாஸ்கோவின் காவேரி என்னும் படத்தில் நடித்தார். அடுத்து பானாகாத்தாடி படத்திலும் நடித்து அவரின் பெயர் பிரபலமானது.

அடுத்தடுத்து வாய்ப்புகள் இல்லை என போனதால் தனது முக தோற்றம் சரியில்லை என நினைத்துக்கொண்டு முகத்தோற்றத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என பல செய்திகள் வெளியானது. தெறி படத்தின் மூலம் விஜய் கதாநாயகியாக நடித்ததிலிருந்து சமந்தாவிற்கு உச்சம்தான். தெலுங்கு, தமிழ் என சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறார்.

சென்னையில் பல்லாவரம் சி.எஸ்.ஐ ஸ்டீபன்ஸ் பள்ளியில் சமந்தா படித்துள்ளார் அவருடைய ரிப்போர்ட் கார்டு ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. 43 பேர் படிக்கும் வகுப்பில் சமந்தா முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார். நடிப்பிலும் சரி படிப்பிலும் சரி சமந்தா நம்பர் ஒன் என நிரூபிக்கும் வழியாக இதை வெளியிட்டுள்ளார் என பலர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website