பழங்கள் சாப்பிடும்போது கவனம் தேவை!
உணவில் முக்கிய பங்கு வகிக்க வேண்டியவற்றுள் ஒன்று பழங்கள். பழங்கள் உண்பது நமது ஆரோக்கியத்துக்கு அதிக நன்மைகளைத் தரும் என்பது அனைவரும் அறிந்தது. பழங்கள் இதய நோய்களை விரட்டுவது, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது என்று பல நன்மைகளைத் தருகிறது. இருப்பினும் பழங்கள் சாப்பிடுவதற்கென சில விதிமுறைகள் உள்ளன.
அவற்றை நாம் சரியான முறையில் கடைபிடித்தால் மாத்திரமே நமக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். பழங்கள் தானே என்று நாம் விரும்பியதைப் போல் சாப்பிடக்கூடாது.
அதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்.
1. ஒவ்வொரு பழங்களும் ஒவ்வொரு விதமான ஜீரணத் தன்மையைக் கொண்டது. எனவே எல்லா பழங்களையும் ஒன்றாகச் சாப்பிடும்பொழுது அது எதிர்வினைப் புரிய வாய்ப்பிருக்கிறது. எனவே பழங்களை பிற பழங்களோடு சேர்த்து சாப்பிடுவது செரிமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். பழங்கள் fruits
2. பழங்கள் எளிதில் ஜீரணித்துவிடும். அதனால் பழங்களை எப்பொழுதுமே தானியங்கள், காய்கறிகள், பால், தயிர் மற்றும் இறைச்சி வகைகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது. அவ்வாறு சேர்த்து சாப்பிடும் பொழுது அது செரிமானத்தில் சிக்கல்களை ஏற்படுத்துவதோடு நச்சுக்களையும் வெளிப்படுத்தும்.
3. சிலர் உறங்கச் செல்லும் முன்னர் பழங்களை சாப்பிடுவர். இது மிகவும் தவறானது. ஏனென்றால் பழங்களில் உள்ள செரிமான நொதிகளானது, நமது தூக்க சுழற்சியை பாதிக்கக்கூடும். அதுமட்டுமில்லாமல் இரத்த சர்க்கரையில் அதிகரிப்பையும் உண்டாக்கிவிடும்.