பஸ்சில் பயணித்த பயணி ஒருவருக்கும் நடத்துநருக்கும் இடையே தகராறு;போதையில் அரசு பேருந்து நடத்துநரை அடித்து கொன்ற பயணி!!

May 14, 2022 at 12:57 pm
pc

சென்னையிலிருந்து விழுப்புரம் சென்று கொண்டிருந்த பஸ்சில் பயணித்த பயணி ஒருவருக்கும் நடத்துநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் போதையிலிருந்த பயணி தாக்கியதில் அரசு பேருந்து நடத்துநர் பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

பஸ் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது இந்த தகராறு ஏற்பட்டதாகவும் இதனால் நடத்துநர் அடித்து கொல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த நடத்துநர் பெருமாள் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் என்பதும், விழுப்புரம் பணிமனையில் பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நடத்துனரை தாக்கிய பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website