பாகிஸ்தானில் சமவயது ஆண் ஒருவருடன் நடனமாடிய இளம் பெண்ணின் காணொளி வெளியான நிலையில், கிராம நிர்வாகிகள் விதித்த தண்டனையை குடும்பத்தினர் நிறைவேற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் மலைப்பகுதியான Kohistan பிராந்தியத்தில் Barsharyal கிராமத்திலேயே குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 18 வயதான அந்த இளம் பெண்ணிற்கு கிராம நிர்வாகிகள் விதித்த மரண தண்டனையை குடும்பத்தினர் நிறைவேற்றியுள்ளனர்.தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர். மேலும், தொடர்புடைய பெண்ணின் காணொளியை பதிவு செய்த நபருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பொலிசார் தலையிட்டு காப்பாற்றியுள்ளனர்.மாவட்ட காவல்துறை அதிகாரி Masood Khan தெரிவிக்கையில், இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில், ஒருவரை காப்பாற்றியுள்ளோம் என்றார். இன்னொருவரை குடும்பத்தினரே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும் கொலை செய்த நபரை தற்போது தேடி வருவதாகவும், அத்துடன் மரண தண்டனை விதித்த கிராம நிர்வாகிகளையும் தேடுவதாக தெரிவித்துள்ளார். கொல்லப்படுவதில் இருந்து பொலிசாரால் காப்பாற்றப்பட்ட இன்னொரு இளம்பெண் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இனி அவருக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.இணையத்தில் கவனத்தை ஈர்த்த அந்த நடன காணொளியில் இடம்பெற்றவர்கள் திருடர்கள் எனவும் அவர்களுக்கு மரணமே தண்டனை என்றும் jirga எனப்படும் கிராம நிர்வாகிகள் குழு தீர்ப்பளித்துள்ளது.பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு காரணங்களுக்காக நூற்றுக்கணக்கான பெண்கள் ஆணவக்கொலைக்கு இலக்காகின்றனர். பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினரே, இதுபோன்ற கொலைகளை முன்னெடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.