பாஜக கொடியில் இருந்த ஆணுறை
மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஷிகர்பூர் கிராமத்தில் பாஜக பேரணி நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல இடங்களில் கொடிகள் கம்பங்களில் ஏற்றப்பட்டிருந்தன. அதில் ஒரு இடத்தில் ஏற்றப்பட்டிருந்த பாஜக கொடிக் கம்பத்தின் நுனியில் ஆணுறை ஒன்று இருந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், இதுகுறித்து பாஜகவினர் போலீசில் புகார் அளித்தனர். இதை ஆளும் திரிணாமுல் கட்சியினர் தான் செய்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.