பாட்டி இறந்த சோகத்தில் மூன்று பேத்திகள் ஒரே நேரத்தில் தற்கொலை..

January 20, 2023 at 1:33 pm
pc

கர்நாடகாவில் ஒரே நேரத்தில் மூன்று சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்கூர் மாவட்டம், பரக்கனஹல் தாண்டாவில் ரஞ்சிதா (24), பிந்து (21), சந்தனா (18) ஆகியோரின் பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். இவர்களது பாட்டி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், மூவரும் மிகுந்த சோகத்தில் இருந்துள்ளனர். வியாழக்கிழமை, இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டின் மேற்கூரையை அகற்றி பார்த்தபோது, ​​மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website