பாம்பு கடித்து சிறுமி பலி-இறந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்…
சென்னை அருகே புதிய எருமைவெட்டிபாளையம் கிராமத்தில் இருக்கும் தனியார் செங்கல் சூளையில் கூலி தொழில் செய்து வரும் பெண்ணின் தம்பி மற்றும் அவரது மனைவி இறந்ததால், அவர்களது மகளை வளர்த்து படிக்க வைத்து வந்தார். இந்நிலையில், கடந்த 24ம் தேதி இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி பாம்பு கடித்துள்ளது. சிறுமியை அலறல் சத்தத்தை கேட்டு சிறுமியின் உறவினர்கள், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிறுமி இறந்து 2 நாட்கள் ஆன நிலையில் சிறுமியை முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியானது. பின் இந்த வீடியோ குறித்து சிறுமியின் உறவினர்கள் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், புதிய எருமைவெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கண்ணன் (எ) சின்னதுரை, பாஸ்கர், சதீஷ், ரமேஷ், விஜயகுமார் ஆகிய 5 பேரும் வீடியோவை மறைவாக நின்று எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரித்ததில் கடந்த 3 மாதங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் பாலு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை வன்கொடுமை செய்த முதியவர் பாலு மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த 5 பேர் உள்ளிட்ட 6 பேர் மீதும் போக்ஸோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.