பாம்பு கடித்த 2 சிறுமிகளை குணமாக்க சாமியாரிடம் சென்ற பெற்றோர் – மூடநம்பிக்கையால் சிறுமிகள் உயிரிழந்த சோகம்!

September 17, 2022 at 12:07 pm
pc

பாம்பு கடித்த 2 சிறுமிகளை குணமாக்க சாமியாரிடம் சென்ற பெற்றோரால் பரிதாபமாக 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2 சிறுமிகளை கடித்த பாம்பு

ராஜஸ்தானில் நள்ளிரவில் 2 சிறுமிகளை பாம்பு கடித்துள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர்கள் ஓடி வந்து பார்த்தபோது, 2 சிறுமிகளையும் பாம்பு கடித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, பாம்புக் கடியை குணமாக்க மருத்துவமனைக்கு சிறுமிகளை அழைத்துச் செல்லாமல் பெற்றோர்கள் நேராக சாமியாரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

பரிதாபமாக உயிரிழந்த சிறுமிகள்

பாம்பு கடித்த 2 சிறுமிகளை அந்த சாமியார் துடைப்பத்தால் தலையில் ஓதியும், சடங்குகளை செய்து பார்த்துள்ளார். ஆனால், பலனளிக்கவில்லை. இதனையடுத்து, பெற்றோர்கள் 2 சிறுமிகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 2 சிறுமிகள் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website