பார்த்திபன் படத்திற்கு இசையமைக்க மறுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!
நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸ் ஆன இரவின் நிழல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்நிலையில் தற்போது பார்த்திபன் அடுத்து இயக்கும் படத்திற்கு தான் இசையமைக்க முடியாது என கூறிவிட்டாராம். அது பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் அனுப்பிய மெசேஜை பார்த்திபன் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
“அதிகம் வேலைகள் பாக்கி இருக்கிறது.. பர்சனல் மற்றும் professional.. அதனால் இந்த முறை உங்கள் ப்ரொஜெக்டை விடுகிறேன். உங்கள் கதையை கேட்க ஆர்வமாக இருந்தேன்.”
இவ்வாறு கூறி பார்த்திபனுக்கு வாழ்த்தும் கூறி இருக்கிறார் அவர்.