பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற பணத்தில் நலத்திட்ட உதவிகளுக்கு கொடுத்த அசீம்… குவியும் பாராட்டுக்கள்!

January 25, 2023 at 5:29 pm
pc

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற பணத்தில் பாதியை நலத்திட்ட உதவிகளுக்கு பயன்படுத்தும் அசீம்

பிக் பாஸ் சீசன் 6 கடந்தாண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். மேலும் சீசன் துவங்கிய சில நாட்களிலேயே சண்டைகள் மற்றும் சர்ச்சைகள் என நிகழ்ச்சி சூடுபிடிக்க துவங்கியது.

எனவே மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசனை காண ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். இதையடுத்து நிகழ்ச்சி ஆரம்பமான முதல் சில வாரங்களில் ரசிகர்களின் பெறாதவரை பெற்ற போட்டியாளராக ஜி.பி முத்து இருந்து வந்தார். ஆனால் தன் குடும்பத்தை பிரிந்து இருக்க முடியாது என்ற காரணத்தினால் போட்டியை விட்டு தானாக வெளியேறினார்.

இதையடுத்து ஒவ்வொரு வாரமும் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் வெளியேற இறுதி வாரத்தில் கதிரவன், அமுதவாணன், ஷிவின், மைனா, அசீம், விக்ரமன் ஆகியோர் இருந்தனர். இதில் கதிரவன் மற்றும் அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேற மைனா குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.

இந்நிலையில் இறுதிப்போட்டியில் விக்ரமன், அசீம், ஷிவின் ஆகியோர் நுழைந்தனர். இதில் விக்ரமன் தான் பிக் பாஸ் டைட்டிலை தட்டி செல்வார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அசீம் அதிகமான வாக்குகளை பெற்று பிக் பாஸ் டைட்டிலுக்கும், ஐம்பது லட்சத்திற்கும் சொந்தக்காரரானார்.

இதையடுத்து சிலர் அசீம் வென்றதை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அசீமின் ஆதரவாளர்கள் அவரின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அந்த தகவலின் படி தான் வெற்றிபெற்ற பணத்தில் பாதியை கொரோனாவால் பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளுக்கு வழங்கப்போவதாக அசீம் முடிவெடுத்துள்ளாராம். இதனை கேள்வி பட்ட ரசிகர்கள் அசீமை வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website