பிக் பாஸ் வீட்டில் வெடித்த சாதி சண்டை!!

October 18, 2022 at 4:25 pm
pc

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் பெரும் பரபரப்பையும், வரவேற்பையும் பெற்றும் வரும் நிகழ்ச்சி, பிக் பாஸ் (Bigg Boss). விஜய் டிவியில் ஒளிப்பரப்பப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரையிலும் 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் பிக் பாஸ் 6வது சீசன் ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கியுள்ளது. இதில் சமூகவலைதள ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த டிக் டாக் நாயகன் ஜி.பி.முத்து முக்கிய போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

​அதகளப்படுத்தும் ஜிபி முத்து

20 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்த நிலையில், 21வது போட்டியாளராக மைனா நந்தினி வருகை தந்திருக்கிறார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் கதாநாயகனாக கருதப்படும் ஜி.பி.முத்துவுக்கு உள்ளேயும், வெளியிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அப்படி இருக்கையில் தற்போது மைனா நந்தினி வருகைக்கு பிறகு பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு மத்தியில் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

​முதல் நாமினேஷன்..ப்ராசஸ்

இந்த சூழலில், பிக் பாஸ் வீட்டின் முதல் நாமினேஷன் ப்ராசஸ் நேற்று நடைபெற்று முடிந்து உள்ளது. இந்த வாரம், முதல் எலிமினேஷனை போட்டியாளர்கள் சந்திக்க இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று சமையல் குரூப்புக்கு என்ன பெயர் வைப்பது? என்பது தொடர்பாக ஆலோசனை நடக்கிறது. அப்போது‘மீன் கடை என பெயர் வைக்கலாம்’ என்று ஆயிஷாவிடம் ஷிவின் கூறுகிறார். 

மீன் கடை..ன்னு சொல்றாங்க

பொதுவாகவே ஆயிஷா சத்தமாக பேசுவார் என்பதால் அதை குத்திக்காட்டி நக்கல் அடிக்கும் வகையில் ஷிவின் அப்படி கூறி இருந்தார். இதை கேட்டதும் ஆயிஷா, ‘விக்ரமன் ப்ரோ.. என்னை மீன் கடைன்னு சொல்றாங்க..’ என திரும்ப திரும்ப கூறி ஏத்தி விடுகிறார். உடனே விக்ரமன், அது தவறான வார்த்தை. அப்படி சொல்லக் கூடாது. ஒரு சமூகத்தையே இழிவுப்படுத்துற மாதிரி இருக்குது. மீன் பிடிக்கிறவர்கள் கத்துவார்கள் என்பது போல் பேசக்கூடாது’ என்று தனக்கே உரிய அரசியலை உள்ளே புகுத்தினார். 

​விடாமல் விரட்டும் விக்ரமன்

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிவின், ‘அய்யய்யோ.. இது போல் பேசுவதாக இருந்தால் என்னிடம் தயவுசெய்து பேசாதீர்கள்’ என்று விக்ரமனிடம் கூறிவிட்டு பாத்ரூம் பக்கமாக சென்றுவிடுகிறார். மீண்டும் விடாமல் விக்ரமன் அங்கு சென்று ஷிவினிடம் சமாதானமாக பேசுகிறார். அதற்கு ஷிவின், ‘நீங்கள் இது போன்று ரிஜிஸ்டர் செய்யும்போது என் மீதுதான் தவறாகவே போய் சேரும். இது போல் ரிஜிஸ்டர் செய்தாக இருந்தால் தயவுசெய்து என்னிடம் பேசாதீர்கள். தனியாக போய் ரிஜிஸ்டர் பன்னிக்கோங்க. இது தவறாக புரொஜெக்ட் ஆகும். அந்த மீனிங்கில் நான் சொல்லவில்லை’ என கோபத்தை வெளிப்படுத்தினார். 

சம்பவம் செய்ய போகும் கமல்

இவ்வாறாக நேற்றை எபிசோடில், பிக் பாஸ் வீட்டில் ஒரு சமூகத்தை மையப்படுத்தி பிரச்சனை உருவான நிலையில், பெரிய அளவில் வெடிக்காவிட்டாலும் ஞாயிறு கமல்ஹாசன் வருகையின்போது பிரச்சனை நிச்சயம் மீண்டும் பூதாகரமாக வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக நெட்டிசன்கள் விக்ரமன் கூறியது சரி தானே..என்பது போல் கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், கமல் செய்ய போவதுதான் சம்பவமாக இருக்கும் எனவும் கூறி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீதான ஆர்வத்தை எகிற விடுகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website