பிசிசிஐ கொண்டுவந்த மாற்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!
விதிகளை மாற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் பதவி காலம் நீட்டிப்பு உட்பட சட்ட திருத்தங்களை மேற்கொள்ள அனுமதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கங்குலி, செயலாளராக ஜெய்ஷா ஆகியோர் 2-வது முறையாக அப்பதவியில் மேலும் 3 ஆண்டுகளுக்கு தொடர்கின்றனர். இருவரும் தங்களது பதவியில் மேலும் 3 ஆண்டுகள் தொடர்வதற்காக பிசிசிஐ கொண்டு வந்த மாற்றங்களை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுள்ளது.