பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் செவ்வாய்க்கிழமை இரவு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் கிடைத்ததும், அகமதாபாத்தில் உள்ள அசர்வா எம்எல்ஏ தர்ஷனாபென் வகேலா மற்றும் தர்யாபூர் எம்எல்ஏ கவுசிக் ஜெயின் ஆகியோர் மேத்தா மருத்துவமனைக்கு நேரில் சென்றனர்.
முதல்வர் பூபேந்திர படேலும் இன்னும் சில நிமிடங்களில் மருத்துவமனைக்கு வருவார். ஹீராபென் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி பிற்பகல் 3 மணியளவில் அகமதாபாத் சென்றடைவார் எனத் தெரிகிறது.