பிரபல தொழிலதிபருக்கு தெருநாய்களால் நேர்ந்த சோகம்!

October 27, 2023 at 6:50 am
pc

இந்தியாவின் வாக் பக்ரி நிறுவன இயக்குனர் பராக் தேசாய், தெருநாய்கள் தாக்குதலின்போது படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாக் பக்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பராக் தேசாய் (49). குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரான இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்முனைவோர் அனுபவம் உடைவர்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) போன்ற முன்னணி தொழில் தளங்களில் தீவிரமாக களமாடிய பராக், இந்திய தொழில்துறையின் மரியாதைக்குரிய குரலாகவும் இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி, தனது வீட்டு வாசலில் தன்னைத் தாக்கிய தெரு நாய்களை விரட்ட முயன்றுள்ளார். அப்போது அவர் கீழே விழுந்து படுகாயமுற்றார்.

இதனைக் கண்ட தேசாயின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக நேற்றைய தினம் பராக் தேசாய் உயிரிழந்தார்.

பராக் தேசாயின்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website