பிரபல பாடலாசிரியர் கபிலன் மகள் தூக்கிட்டு தற்கொலை: திரையுலகினர் அதிர்ச்சி.!
தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியர் கபிலன். கவிஞரும், பாடலாசிரியருமான இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். இந்நிலையில் இவரது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியர் கபிலன் தசாவதாரம் படத்தில் கமலுடன் இணைந்து சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது மகள் தூரிகை சற்றுமுன் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
தூரிகை ”பீயிங் வுமன் (Being Women Magazine ) எனும் இதழையும், தி லேபிள் கீரா (the label keera)எனும் ஆடை வடிவமைப்பகத்தினையும் நடத்தி வந்தார். இவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் அறியப்படவில்லை. இதுதொடர்பாக அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.