பிரிந்து வாழும் சானியா மிர்சா – சோயப் மாலிக்..? இன்ஸ்டாகிராம் பதிவால் சோகத்தில் ரசிகர்கள்!

November 8, 2022 at 4:55 pm
pc

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மலிக் இருவரும் கடந்த 2010ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களுக்கு நான்கு வயது நிரம்பிய இஷான் என்ற மகன் உள்ளான். இந்நிலையில், இந்த நட்சத்திர தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.சோயப் மலிக் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சானியா மிர்சாவை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

எனினும், அவர்களின் பிளவுக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. சோயப்புக்கும் சானியாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த ஜோடி சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

சானியா மிர்சாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன. அல்லாவை தேடி…” என்று பதிவிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவர் தனது மகனுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துகொண்டார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:- “கடினமான நாட்களை கடந்து செல்லும் தருணங்கள்…” என்று பதிவிட்டார்.

சானியா மிர்சாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவின் படி, சோயப்புக்கும் சானியாவுக்கும் இடையேயான உறவு சரியில்லை என்று தெரிகிறது. ஆனால், இது குறித்து இருவரும் கருத்து தெரிவிக்கவில்லை

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website