பிறந்து 20 நாளே ஆன பச்சிளங்குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்
மஹாராஷ்டிரா மாநிலம் அகோலா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிறந்த 20 நாட்களேயான குழந்தையை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மேல் சிகிச்சைக்காக குழந்தையை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படி மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் அங்கு குழந்தை இறந்ததாக தெரிய வந்தது. மேலும் உடற்கூறாய்வு செய்தப்போது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றது தெரிய வந்தது. தாயை போலீசார் கைது செய்த நிலையில் கொலைக்கான காரணம் பற்றி இன்னும் தெரியவில்லை.