பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற எலி!

December 29, 2023 at 11:37 am
pc

பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, எலி கடித்து மரணம் அடைந்த சம்பவம் நெஞ்சை உலுக்கும் விதத்தில் உள்ளது. இந்திய மாநிலமான தெலங்கானா, நாகர் கர்நூல் மாவட்டம் நாகனூல் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் சிவா மற்றும் லட்சுமி கலா. இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த மாதம் தான் குழந்தை பிறந்துள்ளது. இதனால், குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

இதில், லட்சுமி கலா குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு, தூங்கி கொண்டிருந்த குழந்தையின் மூக்கை எலி கடித்து விட்டு சென்றது. இதனால், குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காயத்திற்கு மருந்து தடவி வந்தனர்.

இதனைத்தொடர்ந்து, குழந்தையின் மூக்கின் மேல் இருந்த காயத்தில் மீண்டும் எலி கடித்ததில் ரத்தம் கொட்டியது. அப்போது, குழந்தை வலியால் துடித்தது.

உடனே, குழந்தையை ஹைதராபாத்தில் உள்ள நீலோபர் தாய் சேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். ஆனால், குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. பாதுகாப்பாக கவனிக்காததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website