புகையிலையால் குழந்தையின்மை பிரச்சனை..!!கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
உலக சுகாதார மையம் கவலை கொள்ளும் அளவுக்கு குழந்தையின்மை பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் கடந்த 4 ஆண்டுகளாகவே குழந்தைபேறு குறைந்துகொண்டே போகிறது என்கிறது.
இந்தியாவில் 15% தம்பதியினருக்கு குழந்தைப்பேறு சிக்கலாக உள்ளது. ஒவ்வொரு 5 தம்பதியரில் ஒருவருக்கு குழந்தையில்லை என்னும் நிலை உள்ளது. தற்போது 28.0 மில்லியனுக்கு மேலாக குழந்தையில்லாத தம்பதியர் உள்ளனர்.
இதில் குழந்தையில்லாத தம்பதியினரில் 50% மேல் ஆண்களுக்கே பிரச்சனைகள் உள்ளன. ஆண்களுக்கு விந்தணு, ஆண்மையின்மை, ஹார்மோன் மரபணு போன்ற பிரச்சனைகள் உள்ளன. இதில் 30% பெண்களுக்கும் 20% இருபாலருக்கும் உள்ளன.
50% ஆண்களில் குழந்தையின்மை பிரச்சனைக்கு 25% புகையிலை மற்றும் புகைப்பிடிப்பதனால் குழந்தையின்மை உருவாக்குகிறது என்பது வேதனையானது. புகைப்பிடிப்பதால் கருத்தரித்தல், கருவளர்ச்சி, கருச்சிதைவு, கரு பதிந்து வளர்தல், வளர்ச்சியில் மாற்றத்தை உருவாக்கி, குழந்தையில்லாத நிலைக்கு தள்ளப்படுகிறது.
புகைப்பிடிப்பதால் ஆண் மலட்டுத்தன்மை உருவாகுமா?
புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. அளவு குறைகிறது. நீந்தும் தன்மை குறைகிறது. விந்தணுவின் உருவத்தன்மையில் மாற்றம் உருவாகி அதிலிருக்கும் ஜீன்களை பாதிக்கிறது. ஹார்மோன் மற்றும் ஆண்மையின்மை மற்றும் விரைப்புத்தன்மை உருவாகிறது.
புகைப்பிடிப்பதால் குழந்தை உள்ள தம்பதியருக்கும் விந்தணுக்கள் குறைகிறது.
குழந்தையில்லாத தம்பதியருக்கு ஏற்கனவே மிதமான குறைபாட்டில் இருக்கும் போது அது மிகவும் மோசமாகி குழந்தையில்லாமல் போகும் அளவுக்கு விந்துவில் பாதிப்பை உண்டு செய்கிறது.
ஓர் ஆண் 20 சிகரெட்டுக்கு மேல் புகைப்பிடிப்பதால் பிறக்கும் குழந்தை இரத்த புற்றுநோய் வர வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
மேலை நாடுகள் போலவே நமது நாட்டிலும் பெண்கள் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். பெண்கள் புகைப்பிடிப்பதால் இனப்பெருக்க உறுப்புகளின் பாதிப்பு
அண்டச்செல் (முட்டை) வெளிவருவதில் பாதிப்பு
அண்டச்செல் பாதிப்பு மரபணு பாதிப்பு ஏற்பட்டு சீக்கிரமாக மாதவிடாய் நிற்பது
கருச்சிதைவு
சினைக்குழாயில் கரு தங்குதல்
கருத்தரித்த பிறகு சர்க்கரை நோய்,
குறை பிரசவம்
உயர் இரத்த அழுத்தம்