புற்றுநோயை குமணமாக்கும் இயற்கை தந்த அருமையான அருமருந்து…. நித்திய கல்யாணி மூலிகை…!

June 5, 2022 at 7:38 am
pc

நம் உடலில் சத்தமில்லாமல் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை இறப்பின் வாயிலுக்கு கொண்டு செல்லும் மிகவும் மோசமான நோய்களுள் ஒன்று தான் புற்றுநோய். இந்த நோய் வந்துவிட்டாலே மரணம் தான் என்ற நிலை மாறி, அதற்காக பல்வேறு சிகிச்சைமுறைகள் வந்திருந்தாலும் கூட மக்களிடன் அந்த பயமும், பாதிப்பும் இருக்க தான் செய்கிறது. புற்றுநோயில் பல வகை உண்டு. அந்த வகையில், ஆண்களுக்கு வயிறு, குடல், நுரையீரல், ப்ராஸ்ட்ரேட் சுரப்பி, உணவுக்குழாயிலும், பெண்களுக்கு நுரையீரல், மார்பகம், குடல், வயிறு, கர்ப்பப்பை வாய் ஆகியவற்றிலும் அதிகமாக வருகிறது.

உடலில் தோன்றும் அனைத்து கட்டிகளுமே புற்றுநோய் கட்டிகள் கிடையாது. புற்றுநோய் அல்லாத கட்டிகளால் உயிருக்கு ஆபத்து இருக்காது. இதை வழக்கமான அறுவை சிகிச்சைகள் மூலமே அகற்றிவிட முடியும். ஒருமுறை அகற்றினால் மீண்டும் தோன்றாது. இருப்பினும், புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும். எனவே, உடலில் ஏதேனும் கட்டிகள் தென்பாட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நன்மைப் பயக்கும். இப்போது, புற்றுநோயை குணப்படுத்தும் அற்புதமான மூலிகையை பற்றி பார்க்கலாம்.

நித்திய கல்யாணி:

புற்றிநோயை குணமாக்கும் இந்த நித்திய கல்யாணிக்கு “சுடுகாட்டு மல்லி” என்ற மற்றொரு பெயரும் உண்டு. வாய்க்கால், சுடுகாட்டு பகுதிகள், ஏரி கரையோர பகுதிகள், ஆற்றங்கரை, கடலோர பகுதிகள் போன்ற நீர்ப்பாங்க இடங்களிலும் பரவலாக காணப்படும். எல்லா பருவ காலங்களிலும் பூத்து குலுங்கும் இந்த அற்புத மலர் எந்த அளவிற்கு நம்மை கவர்ந்து இழுக்கின்றதோ, அந்த அளவிற்கு இதில் மருத்துவ குணமும் இருக்கின்றன. குறிப்பாக புற்றுநோய், நீரிழிவு நோய்களுக்கு மிகவும் அருமையான அருமருந்து.

எப்படி சாப்பிட வேண்டும்?

மனிதர்களுக்கு உயிர்க்கொல்லி நோயாக வரக்கூடிய புற்றுநோயை குணப்படுத்த இந்த செடியின் வேரை நிழலில் காயவைத்து பொடியாக (நித்திய கல்யாணி சூரணம்) அரைத்து வைத்துக் கொள்ளவும்.

காலை, மாலை இரண்டு வேளையிலும், அரை தேக்கரண்டி அளவு நித்திய கல்யாணி பவுடர் மற்றும் அரை தேக்கரண்டி தேன் இரண்டையும் கலக்கி, சாப்பிட்டு வந்தால் அனைத்து வகையான புற்றுநோய்களும் குணமாகிவிடும்

அதேப்போல், இந்த சூரணத்தை தேனில் கலக்கி குழந்தைகளுக்கு கொடுத்துவந்தால், குழந்தைகளுக்கு இருக்கக்கூடிய இரத்தசோகை, இரத்ததால் வரக்கூடிய தொற்றுநோய்கள், சரும பிரச்சனைகள், சிறு சிறு புண்கள் ஆகியவை விரைவில் குணமாகும்.

தேன் இல்லையென்றாலும், இந்த நித்திய கல்யாணியின் தண்டு, பூ, மலர், இலை ஆகியவற்றை ஒரு டம்பளர் தண்ணீரில் போட்டு அரை டம்பளர் வரும் வரை கொதிக்க வைத்து அருந்தி வரலாம். இதனால் நீரிழிவு நோயும் விரைவில் குணமாகும்.

எத்தனை நாள் சாப்பிட வேண்டும்?

இரத்தசோகை, இரத்ததால் வரக்கூடிய தொற்றுநோய்கள், சரும பிரச்சனைகள், சிறு சிறு புண்கள் ஆகியவற்றிற்கு 5 நாட்கள் சாப்பிட்டு வந்தால் போதுமானது.

அதுவே, ஆரம்பல காலமாக புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் இருந்தால் 5 நாட்கள் சாப்பிட்டால் போதுமானது.

அதுவே, நீண்ட நாட்களாக புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் இருப்பவர்கள் இந்த சூரணத்தை தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

எவ்வளவு குடிக்க வேண்டும்?

நித்திய கல்யாணி குடிநீரை சிறிய குழந்தைகளுக்கு 5 ml, பெரிய குழந்தைகளுக்கு 10 ml, மற்றும் பெரியவர்களுக்கு 25 – 50 ml வரை குடித்து வரலாம்.

நீண்டநாட்களாக புற்றுநோயால் அவதிபட்டு வருபவர்கள் மூன்று வேளையும், உணவிற்கு முன்பு சாப்பிட்டு வரலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website