பெண்களுக்கு கை சருமம் மினுமினுப்பாக இருக்க ….உங்க வீட்டுல மீதமான தயிர் போதும் …!!
பல பெண்களுக்கு கை சருமம் மினுமினுப்பாக இருக்கும். ஆனால் காலில் இருக்கும் தோல் மட்டும் வறண்டு, சுருங்கி போய் காணப்படும். அதற்காக நீங்க பியூட்டி பார்லர் போகவேண்டும் அவசியம் இல்லை. உங்க வீட்டுல மீதமான தயிர் இருந்தாலே போதும். இந்த வெயில் காலங்களில் வீட்டில் தயிர் அதிகமாக பொரை போடுவார்கள். சில சமயங்களில் ரொம்ப புளித்த விட்டால், எடுத்து ஊற்றிவிடுவார்கள். ஆனால், இனி அந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க.
உங்க கால்களின் சரும சுருக்கத்தினை போக்க புளித்த தயிர் மிகவும் பயன்படும். இப்போது உங்க கால்களில் இருக்கும் சுருக்கத்தை போக்கி மென்மையான, மிருதுவான கால்களை பெற ஒரு சூப்பரான குறிப்பை பார்க்கலாம். இதற்கு இரண்டே பொருட்கள் தான் தேவை. 2 – ஸ்பூன் தயிர், 2 – ஸ்பூன் அரிசி மாவு இவற்றை பேஸ்ட்டாக கலக்கி கொள்ளவும். காலை சுத்தமாக கழுவி பின்னர் அந்த கலவையை அப்ளை செய்து 2 நிமிடம் நன்றாக மசாஜ் செய்து, 5 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்.
மறுபடியும் அதே மாதிரி அப்ளை செய்து மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், கால் சுருக்கம் நீங்கி பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் காலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, கால் சீக்கிரத்தில் வறண்டு போகாது. பார்லருக்கு போய் அதையும் இதையும் பண்றதுக்கு பதிலாக நீங்க வீட்டில் இம்மாதியான இயற்கை பொருட்களை பயன்படுத்தி கால்களை அழகுப் படுத்தலாம். இது சருமத்திற்கு எந்த வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. இந்த குறிப்பு பிடித்திருந்தால் ட்ரை பண்ணிப்பாருங்க.