பெண்களே தெரிஞ்சிக்கோங்க! கருப்பைக்கு வலு சேர்க்கும் கருப்பட்டி வெந்தயக்கஞ்சி!

பொதுவாக கருப்பை என்பது பெண்ணின் உடலில் உள்ள ஒரு முக்கிய உறுப்பாகும். பெண்கள் தங்கள் கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். அதற்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது அவசியமானது ஆகும். அந்த வகையில் கருப்பை வலுப்படுத்தும் கருப்பட்டி வெந்தயக்கஞ்சி எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
பச்சரிசி -1 கப், ( புழுங்கல் அரிசியும் சேர்க்கலாம் ருசி சற்று குறைவாக இருக்கும்)
தேங்காய் -1,
பூண்டு – ஒரு கப்,
வெந்தயம்- 5 முதல் 8 டீஸ்பூன் வரை
கருப்பட்டி – அரை கிலோ ( இனிப்புக்கேற்ப கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம்)
ஏலத்தூள் – கால் டீஸ்பூன்
சுக்குப்பொடி – கால் டீஸ்பூன்
உப்பு- சிட்டிகை
செய்முறை
அரிசியை சுத்தம் செய்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். அரிசியுடன் தோல் உரித்த பூண்டு, கல் நீக்கி சுத்தம் செய்து அலசிய வெந்தயம் சேர்த்து நன் றாகக்குழைய வேகவிடவும்.
இவை அனைத்தும் சேர்ந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கஞ்சி பதம் வரும் வரை குழைய வேகவிடவும். . குக்கரில் சேர்த்து 3 விசில் வரை விடலாம்.
தேங்காயைத் துருவி ஒரு டீஸ்பூன் தனியாக எடுத்து மீதி துருவலை சேர்த்து பால் பிழிந்து கொள்ளவும். முதல் மற்றும் இரண்டாம் பால் எடுத்து சேர்க்கவும். தேங்காய்ப்பாலைக் குழைந்த அரிசி வெந்தயத்தில் ஊற்றவும். இலேசான ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைக்க வேண்டும்.
இப்போது மற்றொரு அகலமான அடிகனமான பாத்திரத்தில் கருப்பட்டியைப் போட்டு கொதிக்க வைக்கவும். சிறிது நீர் விட்டால் போதும் கருப்பட்டி கட்டியில்லாமல் கரையும். இப்போது மேலாக்க கசடுகளை வடிகட்டவும்.
இந்த வடிகட்டிய கருப்பட்டி நீரையும் வேகவைத்த அரிசி வெந்தய குழைவில் சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எடுத்து வைத்த தேங்காய்த்துருவல், ஏலத்தூள், சுக்குத்தூள், உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி இருக்கவும்.
குறிப்பு
இதில் அரிசிக்கு மாற்றாக வரகு,தினை சரிசியும் சேர்க்கலாம். ருசியில் மாற்றம் இருக்கும்.இதன் மேல் வாழைப்பழத்துண்டுகளை நறுக்கி சேர்த்து சாப்பிடலாம்.
நன்மைகள்
உடல் சூட்டைத் தணிக்கும் இந்தக் கருப்பட்டி வெந்தயக் கஞ்சி எல்லா வயதினரும் குடிக்கலாம்.
காலை உணவாக இரண்டு அல்லது மூன்று டம்ளர் குடித்தால் போதும். உடலுக்கு வலு கிடைக்கும்.
பருவமடைந்த பெண்கள் மாதம் இரு முறை குடித்து வந்தால் கருப்பை பலம் பெறும்.
அரிசி, வெந்தயம், கருப்பட்டி மூன்றும் இணைந்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதனால் உடல் உஷ்ணப்பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.