பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து பணம் கொள்ளை;மூவர் கைது

August 27, 2022 at 2:55 pm
pc

கொச்சியில் இளம்பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவத்தில் பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கு தொடர்பான சம்பவம் கடந்த 22ஆம் தேதி நடந்தது. தோப்பும்பாடியை சேர்ந்த பெண்ணை, எடப்பள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்து போதை மருந்து கொடுத்துள்ளனர். 

பின்னர் அவரை மிரட்டி பணத்தை அபகரித்தனர். ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி அவரது கணக்கில் இருந்து பணமும் திருடப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

எடப்பள்ளி தோப்பில் வீட்டைச் சேர்ந்த டிஜோ ரென்ஸ் (30), திருச்சூர் பெரமங்கலத்தைச் சேர்ந்த ஜோத்சனா (26), வாழ்கலை குடியிரிக்கல் வீட்டைச் சேர்ந்த சபீர் (27) ஆகியோரை தோப்பும்பாடி போலீசார் கைது செய்தனர். குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் கொடுத்து இளம்பெண்கள், ஆண்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. முக்கியமாக பெண்களை குறிவைத்து குற்றச்செயல் புரிந்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website